சென்னை:113-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,113-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு வழங்கும் கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரச்சனையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கருணைத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.8000 லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்தி […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 28-ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் அடைப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது […]
கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்திற்கு […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் கடிதம். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இன்று அதிகாலையில் ரஷ்யா, உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து வெளியுறவுத்துறை உடனடி கவனத்தை ஈர்க்க விழைவதாகவும். […]
தமிழகத்தில் இதுவரை கொரோனவால் பாதித்தோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு தொடக்கம் முதல் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2,153 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33,98,231-ஆக அதிகரித்துள்ளது. கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆகும், இதுவரை கொரோனாவால் […]
சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான 2வது வழக்கில் ஜாமின் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சென்னை, ராயபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில், சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த […]
உக்ரைன் – ரஷ்யா போரால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வரும் உலக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்தவகையில், இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து, ரூ.38,616 க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.108 அதிகரித்து, […]
கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு எல்லையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.எல்.ஏ எஸ் .பி வேலுமணி சந்தித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் அடைப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனைத் […]
உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலியால் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து, ரூ.38,616 க்கு விற்பனை. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லையில் 2 லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்து போரை தொடுத்துள்ளது. உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்களை […]
உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை. உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு நாடு திரும்புவதற்கு உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என்று தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, http://nrtamils.tn.gov.in என்ற இணையம் வாயிலாக உதவி கோரலாம் என்று அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இதனிடையே, உக்ரைன் நாட்டின் தலைநகர் […]
சென்னை:112-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,112-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சதீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை,காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.கைதான 13 காரைக்கால் மற்றும் 9 நாகை மீனவர்களிடம் மயிலிட்டி துறைமுகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அடிக்கடி இலங்கை கடற்படையால் தமிழக […]
கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AVல் இன்று மறுவாக்குபதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி,21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில்,பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றியை பதிவு செய்தது. இதற்கிடையில்,வாக்கு எண்ணிக்கையின் போது,இயந்திரம் பழுதானதால், கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4-ம் […]
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மற்றும் அவர்களது உடமைகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்துவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது. […]
பாஜக கூட்டணி கட்சிகளை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் அவ்வப்போது, பாஜக மற்றும் மத்திய அரசை விமர்சித்து சமூகவலைதளப்பக்கத்தில் கருத்து பதிவிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது பாஜக கூட்டணி கட்சிகளை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து காலியான கட்சிகளின் பட்டியல் இதோ!காஷ்மீர்-பிடிபி, அஸ்ஸாம்-ஏஜிபி,பீகார்- ஜேடியு,கர்நாடகா-ஜேடி எஸ் இன்னும் பல்வேறு மாநிலங்களில் சிறிய கட்சிகள். சிவசேனா, ஜேஎம்எம்(ஜார்கண்ட்) இரண்டும் பாஜகவிடமிருந்து தப்பி, மயிரிழையில் உயிர் பிழைத்தன. […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,46,388 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 8 […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் முதல்வரை சந்து வாழ்த்து பெற்றார். தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அந்த வகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். இந்த நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர். அந்த […]