சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து 37, 904 க்கு விற்பனை செய்யப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த முதல் நாளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்றும் இன்றும் சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து 37, 904 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்தது ரூ.69 க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
சென்னை:114-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,114-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
தமிழகத்தில் நாளை (பிப்.27-ஆம் தேதி) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு. தமிழகத்தில் நாளை (பிப். 27-ஆம் தேதி) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மட்டுமல்லாமல் பள்ளிகளிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த […]
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் – அவசரத் தேவையாகும் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க மத்திய அரசு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதுரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் […]
TNPSC தேர்வர்களுக்கு OTR கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும், அவர்களது ஆதார் எண்ணை வரும் 28-ஆம் தேதிக்குள், ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் தவறாமல் இணைக்க வேண்டும் என்றும், அதனடிப்படையில், எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கடந்த 1-ஆம் தேதி TNPSC வெளியிட்டிருந்த […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரை வழங்கி ட்வீட் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அந்த வகையில், பெரும்பாலன இடங்களில் திமுக வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தனர். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பு. தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் […]
மனிதநேயம் குறித்து பேசிய மாணவர் அப்துல்கலாமுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் ட்வீட். அப்துல் கலாம் என்ற மாணவர் மனிதநேயம் குறித்து பேட்டியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், மனிதநேயம் குறித்து பேட்டியளித்த மாணவர் அப்துல்கலாமை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய […]
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,800 அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,800 அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ,1,136 சரிந்து, ஒரு சவரன் ரூ.38, 472-க்கும், தங்கம் கிராமுக்கு ரூ.142 குறைந்து, ஒரு கிராம், ரூ.4,809-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.70-க்கு விரப்பணியாகிறது. தங்கம் விலை திடீரென குறைய காரணம் […]
முதல்முறையாக முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் ஒருவர் சேர்ப்பு. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் முதல்முறையாக பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளர். 250-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் சுழற்சி முறையில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில்,தற்போது அதில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து,முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்ட நிலையில்,மேலும் சில பெண் காவலர்களை சேர்க்க பயிற்சிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மாலை சரியாக 4 மணிக்கு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த […]
உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை,கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்நிலையில்,இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ள நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்மந்தமான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை. திருப்பூர் மாநகராட்சி 36-ஆவது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. தேர்தல் செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 ஓட்டுகள் மட்டும் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறவில்லை என்பது […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் வரவு, செலவு கணக்குகள் விவரத்தினை உரிய அலுவரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் […]
திமுக என்பது ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால்,அதிமுக என்பது கடலினைப் போன்றது. ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்று கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தலைமை இல்லாததே நகர்ப்புற தேர்தலில் டெபாசிட் இழக்கக் காரணம் என்றும்,எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது எனவும்,அது தி.மு.க.வில் சங்கமமாகிவிடும் என்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில்,கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் […]
திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் மேலும் 2 அதிமுகவினரை கைது செய்த போலீசார். சென்னை தண்டியார்பேட்டையில் திமுக தொண்டர் நரேஷை தாக்கிய வழக்கில் மேலும் இரண்டு அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடசென்னை அம்மா பேரவை இணை செயலர்கள் பரமேஸ்வரன், டில்லி ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் என்பவர் […]
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு. உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்ய இராணுவம் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி […]