உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் வட்டம் ,செக்காரக்குடி கிராமத்தில் தனியார் ஒருவருடைய வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது பாண்டி, இசக்கிராஜ், தினேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் விஷவாயு […]
சாத்தான்குளம் விவகாரத்தில் அதிமுக குற்றவாளிகளை காப்பாற்றுகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையில் ,சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் ரீதியாக முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.ஆனால் இதற்கு இடையில் ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் இது […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கடலூர் ,விழுப்புரம் ,தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை, மற்றும் நாமக்கல், சேலம் ,ஈரோடு, தர்மபுரி ,வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 5இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை […]
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். இந்நிலையில், பெண் காவலர் ரேவதியிடம் தூத்துக்குடி […]
சாட்சியளித்த பெண் காவலரிடம் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஹேமா விசாரணை. சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் காட்சியளித்த பெண் காவலர் ரேவதியிடம் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி வருகிறார்.
ராயபுரத்தில் இதுவரை மொத்தமாக 8,506 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 4000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 2,027 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை […]
தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்பொழுது அதில் சில பதிவுகள் கிடைத்துள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்தார். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்டது. இதனை தொழில்நுட்பம் மூலமாக […]
சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில்,ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன் சிபிசிஐடி சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தற்போது சிபிசிஐடி இது […]
சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கில் தலைமை காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துராஜ் தலைமறைவான நிலையில் தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. நேற்று ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை வருகின்ற 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் முட்டை விலை மாற்றமின்றி 3.70 காசாகவே நீடிக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான் என்று கூறலாம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. மேலும் அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது,இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நாமக்கல் […]
திமுகவில் இருந்து விலகிய வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் . இதனால், துணைப் பொதுச்செயலாளராக அந்நியூர் செல்வராஜை மு.க.ஸ்டாலின் நியமித்தார். இதனிடையே சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்து தமிழக பாஜக தலைவர் முருகன் உத்தரவு […]
அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமி காணாமல் போன நிலையில், அவரது உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அறந்தாங்கி அருகே […]
தமிழகத்தில் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திக் சத்துணவு திட்ட மாணவர்களுக்கான முட்டை மற்றும் மாணவிகளுக்கான நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை வெளியிட்டுள்ளது. மேலும், எப்படி நாப்கின், முட்டை வழங்கப்பட உள்ளது என்பதை […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற லாக்கப் இரட்டைப் படுகொலையை மையமாக வைத்து அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியம் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் இந்தியாவையே உலுக்கும் அளவிற்கு பெரிய போராட்டமாக வெடித்த சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரின் சித்திரவதை கொலைகள் இந்தியா முழுவதையுமே மிகவும் உலுக்கியது. இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தூண்டுதல் காரணமாக சமூக வலைதளங்களில் பெரும் புரட்சியாக […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் எனும் கிராமத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனார். அவர் கடந்த 1ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஊரணியில் […]
காலையில் எழுந்தவுடன் ஆப்பிள் மற்றும் திராட்சை மாதுளை பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கும். ஆப்பிள்: காலையில் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது , மேலும் பாஸ்பரஸ் பொட்டாசியம் சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது . இந்த பழத்தை உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து உடலை […]
கோவை அரசு மருத்துவர் பன்னீர்செல்வத்தை பாராட்டிய அமைச்சர் வேலுமணி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் ஒரு முறையை மட்டுமே பயன்படுத்தும், கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் காரணமாக சுகாதார சீர்கேடு அதிகரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், […]
சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது. இதைதொடர்ந்து, 3 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி ஹேமா முன் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை […]
சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது. இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடிவு செய்தனர். இதனால், 3 பேரையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு நிலையில் தற்போது தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 உயிரிழப்பு . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.