1980,1990 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் ராஜசேகர். நடிகராக மட்டுமின்றி, இவர் சினிமா துறையில், இயக்குனர், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் காலமானார். இவருக்கு தாரா என்ற மனைவியும் இருக்கிறார்.
மேலும், ராஜசேகர் இறப்பதற்கு முன்பு, சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட் ஒன்றை வாங்கினார். மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா சென்னையில் வசித்து வருகிறார். இவரது கணவர் வாங்கிய வீட்டிற்கு இன்னும் 35 லட்சம் கட்டவில்லை என, வங்கி அதிகாரிகள் இவரிடம் பணம் கேட்டுள்ளார்களாம்.
அதற்கு, இந்த வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறேன். என்னால் எப்படி அவ்வளவு பணம் கொடுக்க முடியும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவருடைய மனைவி தாரா ” என்னுடைய கணவர் வாங்கிய அந்த வீட்டை தற்போது வாடகைக்கு விட்டு அதன் மூலம் வரும் பணத்தை வைத்து தான் நான் வாழ்கிறேன்.
வங்கியில் அந்த வீட்டை ஏலத்துக்கு விடுவதை விட வேற வழி இல்லை என்று கூறிவிட்டார்கள். என்னுடைய கணவர், நடிகர்கள், இயக்குனர்கள், சின்னத்திரை நடிகர் சங்கம் என்று எல்லா சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். எனவே எனக்கு உதவி வேண்டும் என்று அங்கேயும் உதவி கேட்டு போனேன். ஆனால், யாரும் உதவி செய்யவில்லை.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும். என்னை இந்த வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள். எனவே, முதலமைச்சருக்கும் கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறேன். சினிமா துறையில் இருப்பவர்களும் உதவி செய்யுங்கள்” என சோகத்துடன் பேசியுள்ளார்.
அகமதாபாத் : விமான நிலையத்திற்கு அருகே நடந்த எயர் இந்தியா விமான விபத்தில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய்…
அகமதாபாத் : விமான நிலையத்திற்கு அருகே எயர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளான தகவலை மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை…
அகமதாபாத் : குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர்…
சென்னை : வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்…
சேலம் : சேலம் சென்றுள்ளமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீரை திறந்து வைத்தார்.முதல்…
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம்…