ப்ரோ நமக்கு செட் ஆகாது! சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பை நிகாரித்த விஜய்?

Published by
பால முருகன்

Vijay நடிகர் விஜய் தவறவிட்ட பல படங்கள் மற்ற நடிகர்கள் நடித்து மிக்பெரிய சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 2003ம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தை கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்றே சொல்லலாம்.

read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்ததே நடிகர் விஜய் தான். ஆனால், அந்த சமயம் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், காக்க காக்க படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது விஜய் எதற்காக இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

இது குறித்து பேசிய இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் ” முதலில் நான் சூர்யாவிடம் காக்க காக்க படத்தின் கதையை சொல்லவில்லை விஜய், அஜித், விக்ரம் ஆகியோரிடம் தான் சொன்னேன். அவர்கள் எல்லாருமே ஒரு ஒரு காரணம் சொன்னார்கள். விஜய் படத்தின் கதையை கேட்டுவிட்டு எனக்கு இந்த படம் செட் ஆகாது. போலீஸ் கதாபாத்திரம் படம் எப்படி வரும் என்று எனக்கு தெரியவில்லை.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

எனவே, நான் இப்படியான ஒரு காதாபாத்திரத்தில் நடித்தால் செட் ஆகுமா என எனக்கு யோசனையாக இருக்கிறது என்று கூறி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்” என இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்  தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் அவர் சொன்னபடி அவருக்கு செட் ஆகி இருக்குமா என்பது சந்தேகம் தான். சூர்யாவை விட இந்த படத்தில் வேறு யாரும் நடித்து இருக்கா முடியுமா என்கிற அளவுக்கு அவர் மிரட்டலாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

22 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

45 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago