மங்காத்தா பாணியில் அஜித் 62.! மனம் திறந்த விக்னேஷ் சிவன்.!

Published by
பால முருகன்

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், எச் வினோத் இயக்கத்தில் ‘AK 61’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வங்கி திருட்டு மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், AK 62 படம் குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த விக்னேஷ் சிவன் கூறியதாவது ” AK 62 வது படத்தை மங்காத்தா பாணியில் எடுக்க முயற்சி செய்ய போகிறேன். அஜித் சார் நடித்த வாலி மற்றும் மங்காத்தா திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் மங்காத்தா படத்தின் இடைவேளையின் பொழுது அவர் மட்டுமே அந்த சீனில் வருவார்.

மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். அதனால் அது போன்று வித்தியாசமான அஜித் சாரை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தி போகிறேன்” என தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

 

மேலும், விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘காத்துவாகுல ரெண்டு காதல்’ ஏப்ரல் 28 அன்று வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

6 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

6 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

7 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

8 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

8 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

9 hours ago