Bharathiraja and ivana [File Image]
Ivana : படப்பிடிப்பு தளத்தில் நடிகை இவானாவை பாரதி ராஜா செல்லமாக திட்டியுள்ளார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசும் ஒரு குணம் கொண்ட மனிதர். இதனை அவர் பேட்டிகளில் பேசும் போது தெரியும். ஒரு காலத்தில் ஹிட் படங்களை இயக்கி கொண்டு இருந்த அவர் தற்போது சமீபகாலமாக படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாகதிருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள கள்வன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவானாவை பாரதிராஜா திட்டினாராம்.
அதும் சீரியஸ் ஆக எல்லாம் திட்டவில்லை ஜாலியாக திட்டி இருக்கிறார். ஒரு முறை ஷூட்டிங்கின் போது இவானா பாரதி ராஜாவை கண்டுகொள்ளாமல் போய்விட்டாராம். உடனடியாக ஏய் இங்க வா நான் யார் தெரியுமா என்ன நீ என்னை கண்டு கொள்ளலாமா போற? நான் யாருனு சொல்லுன்னு கேட்டாராம் அதற்கு இவானா சில நேரம் யோசித்து பாரதிராஜா என்று கூறினாராம்.
அவர் அப்படி மிரட்டிய அடுத்த நாளில் இருந்து இவானாவை எங்கு பார்த்தாலும் குட் மார்னிங் என்று கூறிவிடுவாராம். பாரதி ராஜா அன்று செல்லமாக மிரட்டிய காரணத்தால் தான் இவானா பயந்து போய் பாரதிராஜாவிடம் பேசினாராம். இந்த தகவலை இயக்குனர் பாரதிராஜாவே ஜாலியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…