Categories: சினிமா

வசூல் வேட்டையை தொடங்கிய சந்திரமுகி 2! முதல் நாளிலேயே இத்தனை கோடியா?

Published by
கெளதம்

சந்திரமுகி முதல் பாகம் ரசிகர்ளுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாவது பாகத்தை அதே இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில்  நேற்று (செப்டம்பர் 28-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகினது

இந்த இரண்டாவது பாகத்தில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் மற்றும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் இதில், மஹிமா நம்பியார், வடிவேலு, லட்சுமி மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், ரவி மரியா, சுரேஷ் சந்திர மேனன், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை 60 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். படத்தை பார்த்த பலரும் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனவும், படத்தில் பாடல்கள் மிகவும் மோசம் என்றும், இந்த படத்திற்கு பாடல்கள் தேவையே இல்லை என கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.

இப்படி, கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின்  முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவளின்படி, இந்திய அளவில் இப்படம் ரூ. 7.5 கோடி வசூலித்திருக்கலாம் என்றும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5 கோடி கிட்ட வசூலித்திருக்கலாம் எனவும் உலகளவில் மொத்தம் ரூ.15 கோடி தொட்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வசூல் இன்னும் அடுத்தடுத்த நாட்கள் மேலும் அதிரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. காரணம் தொடர் விடுமுறை தினம் என்பதால், டபுள் மடங்கு வசூலிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

2 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

3 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

4 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

4 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

5 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

5 hours ago