அதை பாத்துட்டு தனுஷ் கட்டி பிடிச்சாரு! உண்மையை உடைத்த துஷாரா விஜயன்!

Published by
பால முருகன்

தனுஷ் : சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை துஷாரா விஜயன் அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்கி நடித்து முடித்துள்ள ‘ராயன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் தனுஷின் 50-வது திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக தொடங்கி இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக படத்தில் நடித்த பிரபலங்கள் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை துஷாரா விஜயன் ராயன் படம் குறித்தும் தனுஷ் பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை துஷாரா விஜயன் ” நான் திரையில் பார்த்து ரசித்த தனுஷ் சாருடன் படத்தில் நடித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். பல பேட்டிகளில் நான் சொல்லி இருக்கிறேன் எனக்கு தனுஷ் சார் தான் பிடிக்கும் என்று.

எந்த படத்தை பார்த்துவிட்டு அவர் ராயன் படத்தில் நடிக்க என்னை அழைத்தார் என்று தெரியவில்லை. சார்பட்டா பரம்பரை படத்தில் படத்தில் நான் நடித்த காட்சிகளை அவர் பார்த்ததாக சொன்னார். ராயன் படத்தில் நடிக்கும்போது என்னால் மறக்கவே முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. படத்தில் ஸ்டண்ட் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் நான் நடித்து முடித்த பிறகு தனுஷ் என்னை கட்டி பிடித்து பாராட்டினார். நமக்கு பிடித்த ஒருவர் கிட்ட இருந்து இந்த பாராட்டி வந்தது இதைவிட சிறப்பாக என்ன இருக்க முடியும் என்பது போல அந்த சமயத்தில் நினைத்தேன்” எனவும் நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

2 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago