Engaeyum Eppothum [File Image]
இன்றைய காலகட்டத்தில் படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடைந்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அப்படியான ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களும் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று ஹிட் ஆகியும் வருகிறது. அந்த வகையில், 3, முத்து, ஆளவந்தான் ஆகிய படங்கள் எல்லாம் கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் ஆகி பலத்த வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த படங்களை தொடர்ந்து காதலர்கள் கொண்டாடி தீர்க்க ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எம்.சரவணன் இயக்கத்தில் அஞ்சலி, ஜெய், ஷர்வானந்த், அனன்யா ஆகியோர் நடிப்பில் செப்டம்பர் 16. 2011 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது.
நாளை “கேப்டன் மில்லர்” ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.! குட்டி ஸ்டோரி சொல்லும் தனுஷ்.!
படத்தில் வரும் காமெடி காட்சிகள் காதல் காட்சிகள் எல்லாம் அந்த சமயமே பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் கண்கலங்க வைக்கும் வகையில் இருக்கும். அந்த சமயம் பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் மீண்டும் திரையங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
அதன்படி, வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ஒன்றாக இணைந்து பார்ப்பதற்காக படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். மீண்டும் படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தை பார்க்க பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தை போல கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற பையா திரைப்படமும் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…