fahadh faasil [file image]
மலையாள சினிமாவில் பிரபல ஜோடிகளான பகத் பாசில் மற்றும் நஸ்ரியா, தங்களின் 9வது திருமண நாளை கொண்டாடும் விதமாக, கேரளாவில் முதன் முறையாக இந்த தம்பதியினர் புத்தம் புதிய “லேண்ட் ரோவர் டிஃபென்டர்” என்ற சொகுசு காரை வாங்கியுள்ளனர். இதன் மூலம் கேரளாவின் முதல் ‘லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90’ சொகுசு காரை வாங்கிய நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த வாகனத்தின் ஆன்ரோடு விலை ரூ.2.70 கோடி ஆகும். இந்த கனவு காரை வாங்குவதற்காக பகத் பாசில் ரூ.46 லட்சம் வரி செலுத்தியுள்ளராம். இந்த வாகனம் கொச்சியில் உள்ள முத்தூட் ஜேஎல்ஆர் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டது. இந்த காரில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாராகியுள்ள டிஃபென்டரில் ஆறு ஏர்பேக்குகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என பல தரம்வாய்ந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
திருமண கொண்டாட்டம்:
ஆகஸ்ட் 21ம் தேதி தனது திருமணநாளை மனைவி நஸ்ரியா உடன் கொண்டாடினார் பகத் பாசில். அன்றைக்கு தான் நடிகர் சாந்தனு-கீர்த்தி திருமணநாள் என்பதால், 2 ஜோடிகளும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகஸ்ட் 21, 2014-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செய்து பல வருடங்கள் கழித்து, டிரான்ஸ் உப்பட ஆறு திரைப்படங்களில் படங்களில் ஒன்றாக நடித்தனர்.
பகத் கையில் பல சொகுசு கார்கள்:
தற்போது, ரூ.2.70 கோடி கொடுத்து வாங்கிய ‘லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90’ காரை தவிர பகத் – நஸ்ரியாவின் வீட்டில் BMW 740i, Porsche, Mini Countryman, Lamborghini Urus மற்றும் Range Rover என வரிசை கட்டி நிற்கிறது, இது அனைத்துமே கோடிகளில் அடங்கும். இதனை வைத்து பார்க்கையில், இவர்கள் இருவரும் கார் பிரியர்கள் என்று தெளிவாக தெரிகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…