ரஜினி முதல் அட்லீ வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில் கோலிவுட் பிரபலங்கள்.!

Published by
கெளதம்

ஆனந்த் அம்பானி : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறுற்றது. இந்த திருமண விழாவிற்கு தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய நடிகர்கள் வருகை தந்ததால் மும்பையில் நட்சத்திர பட்டாளமே ஒன்று கூடிய தருணம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

மும்பை நகரத்தில் உள்ள அம்பானியின் ஜியோ வேர்ல்ட் டிரைவில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராம் சரண், மகேஷ் பாபு உள்ளிட்ட தென்னிந்திய சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

அதிலும் குறிப்பாக கோலிவுட்டில் இருந்து, நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி, மகள் சௌந்தர்யா, மருமகன் மற்றும் பேரனுடன் கலந்துகொண்டார். மேலும், ரஜினி மணமக்களுடன் இந்தி பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து, சூர்யா பட்டு வேஷ்டி, சட்டையுடன் தனது மனைவி ஜோதிகாவுடன் பங்கேற்றார்.

மேலும், பட்டு சேலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், பட்டு வேஷ்டியில் அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர்.

தகதகன்னு மின்னும் பிங்க் நிற உடையில் அட்லீ மற்றும் மனைவி பிரியா வருகை தந்தனர்.

 

விழாவில் கிளாஸாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது மனைவியுடன் கலந்த கொண்டார்.

Published by
கெளதம்

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

8 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

52 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago