அவர் மட்டும் இல்லனா தற்கொலை பண்ணிருப்பேன்! மும்தாஜ் சொன்ன பகீர் தகவல்!

Published by
பால முருகன்

Mumtaj : அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து இருப்பேன் என நடிகை மும்தாஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் , தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் நடிகை மும்தாஜ். இவர் விஜய்யுடன் இணைந்து ஆடிய கட்டிபுடி கட்டிப்புடி டா பாடல் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆனால் , நல்ல நடிப்பு திறமை இருந்தும் கூட இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. கடைசியாக தமிழில் ராஜாதி ராஜா படத்தில் தான் நடித்து இருந்தார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் மும்தாஜிற்கு பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில், பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகை மும்தாஜ் தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை வேதனையுடன் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய மும்தாஜ் ” ஒரு முறை எனக்கு குறுக்கு மிகவும் அதிகமாக வலித்தது. அந்த வலியை என்னால் வார்த்தைகளால் கூறவே முடியவில்லை.

அந்த வலி ஏற்பட்ட போது என்னால் என்னுடைய முதுகை கூட அசைக்கக்கூட முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அந்த வலியை தாங்க முடியாமல் அனுபவித்தேன்.. அதன்பிறகு. மருத்துவமனையில் ஆராய்ச்சி செய்து, ஆட்டோ இம்யூன் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது எனக்கு தெரிய வந்தது. இந்த நோயினால் என்னுடைய உடலில் எங்கு எலும்பு மூட்டுகள் இருந்தாலும் பயங்கர வலி ஏற்பட்டது.

அந்த நேரங்களில் எல்லாம் என்னால் நிற்கவோ. உடலை அசைக்கவோ முடியாமல் நரகத்தில் இருந்தது போல உணர்ந்தேன். இதனால் ரொம்பவே மனா உளைச்சலுக்கும் ஆள் ஆனேன். ஒரு முறை இதனால் ரொம்பவே நொந்துபோய் இரண்டு மணி நேரம் அழுதுகொண்டே இருந்தேன். பிறகு இதில் இருந்து என்னுடைய அண்ணன் தான் என்னை வெளியே கொண்டு வந்தார். அவர் மட்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து இருப்பேன்” எனவும் மும்தாஜ் கூறியுள்ளார். முதுகு வலிக்கு மும்தாஜ் தற்கொலை செய்ய துணிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago