Vijay Antony Interview [Image source : file image ]
கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்திருந்த பிச்சைக்காரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் அவருடன் காவ்யா தாபர், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் வரும் மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், படத்தின் பிரமோஷனுக்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனியிடம் பிச்சைக்காரன் 2-வது படத்தில் உங்களை தவிர வேறு யார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சரியாக இருப்பார் என்று கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, ‘என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தகமாகவும், அதனைப் புரிந்துகொண்டு நடிப்பதற்கு ஏற்ற ஒருவர் மகேஷ் பாபு தான்’ என்று கூறியுள்ளார். அவர் அளித்த இந்த பதிலைக் கண்டு மகேஷ்பாபு ரசிகர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி உற்சாகமடைந்தனர்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…