vijay and jyothika [file image]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 68 எனும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.
தளபதி 68 ஹீரோயின்
தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கிவிட்டது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகை ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் பரவியது. இதனையடுத்து, தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிக்க ஜோதிகா மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
அதனை தொடர்ந்து நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருந்தும் விஜய் ஜோதிகா இதற்கு முன்பு நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் எனவே நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருந்த தகவலை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அவர்களுக்கு இந்த தகவல் சோகத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது தெரிய வரும்.
ஏற்கனவே நடிக்க மறுத்த ஜோதிகா
விஜய்யுடன் ஜோதிகா நடிக்க மறுத்தது இது முதல் முறை இல்லை இதற்கு முன்பு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்திலும் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்கவிருந்தார். சில காரணங்களால் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அதைப்போல இப்போதும் தளபதி 68 படத்திலும் ஜோதிகா நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதால் நெட்டிசன்கள் விஜய் மீது அப்படி என்ன கோபம்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதிநவீன முறையில் தளபதி 68
தளபதி 68 படத்தில் அதிக VFX காட்சிகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியான நிலையில், அமெரிக்காவில் அதிநவீன முறையில் அவரது முகம் 3D ஸ்கேன் செய்யப்படும் புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதன் மூலம் படத்தில் நிறைய VFX காட்சிகள் இடம்பெறும் என உறுதியாகியுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…