Categories: சினிமா

சிவகார்த்திகேயன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் லோகேஷ்.! தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…

Published by
கெளதம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தாற்காலியமாக “தலைவர் 171” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இயக்குனர்டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், தற்போது தலைவர் 171 படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 2024 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்திலாவது ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த கனவு ஒரு வழியாக இயக்குனர் லோகேஷ் மூலமாக நிறைவேறியுள்ளது.

அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய வயதில் இருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும், அவருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவு என்று பல தருணங்களில் வெளிப்படுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் பல மேடைகளிலும் ரஜினியின் குரலை தான் மேமிக்ரி செய்திருக்கிறார்.

ஜெயிலரை விட்டாச்சு…தலைவர் 171 ஐ பிடிச்சாச்சு! சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பார்ட்?

இந்த நிலையில்,  “தலைவர் 171” படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது, அந்த தகவல் உறுதியாகிவிட்டது. ஆம்,  சிவகார்த்திகேயனின்  நீண்ட நாள் கனவான ரஜினியுடன் நடிக்க காத்திருந்த நிலையில், தலைவர் 171 அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார் என்று நம்பகமான சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

‘தலைவர் 171’ கதை எனக்கு தெரியும்.! கெளதம் மேனன் ஓபன் டாக்.!

இந்நிலையில், இந்த தகவலை வைத்து பார்க்கையில், முன்னதாக ஜெய்லரில் நடிக்கும் வாய்ப்பை தவிர விட்ட சிவகார்த்திகேயனுக்கு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், இந்த படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், பிருத்விராஜ் சுகுமாரன் மேலும் சிலர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago