மீண்டும் வெடிக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை…பினராயி விஜயன் கடும் கண்டனம்!

Published by
கெளதம்

The Kerala Story: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்ப கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில், கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதிகளாக மாறி, இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக படத்தின் ட்ரெய்லர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் தூர்தர்ஷன் என்ற டிவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “அரசு தொலைக்காட்சி, பாஜக – ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரசார இயந்திரமாக மாறக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது.

தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, ‘மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இது பதட்டங்களை அதிகப்படுத்தும்” என்று கூறி, சர்ச்சைக்குரிய திரைப்படத்தை திரையிடுவதில் இருந்து விலகுமாறு” அந்த டிவி ஒளிபரப்பாளரைக் கேட்டுக் கொண்டார்.

படத்தின் டிரெய்லரில் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் புண்படுத்தும் வகையில் காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறி, படத்தை வெளியிட தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு மறுத்துவிட்டது. 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு எதிராக சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸால் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago