சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Published by
கெளதம்

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. யுவன் பாடல்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “The Greatest of All Time” படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில், கோட் படத்தில் இருந்து யுவன் இசையில் ‘விசில் போடு‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். இவ்வாறு, பாடல் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பாடல் யூடியூபிலும் மில்லியன் பார்வையாளர்களை சாதனை படைத்துள்ளது.

தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து இந்தப் பாடலில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும், இசை ரீதியாக இந்தப் பாடலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், பாடலை பிடிக்காத விஜய் ரசிகர்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவை ட்ரோல் செய்தனர். இந்த சூழலில் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு முடங்கப்பட்டுள்ளது.

யுவனின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, யுவன் தனது இன்ஸ்டா கணக்கை deactivate செய்துவிட்டாரா அல்லது வேறு யாரும் ஹக் செய்துவிட்டார்களா? சமூக வலைதளத்தில் பல்வேறு யூகங்களும் பரவத் தொடங்கியது.

இந்நிலையில், இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டதாகவும், மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 minute ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

2 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

2 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

2 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

3 hours ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

4 hours ago