விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு நான் சந்தித்த அனுபவம்.! சமந்தா பகிர்ந்த ருசிகர தகவல்.!

Published by
மணிகண்டன்

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு ஏ அரேஞ்மென்ட் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்திற்க்கு தான் ஆடிஷனில் கலந்துகொண்டுள்ளேன் என சமந்தா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடித்து நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படம் தமிழை போல தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரானது. அந்த படத்தில் நாக சைதன்யா, சமந்தா நடித்துப்பார்கள். மேலும், சமந்தா, தமிழில் ஒரு சிறு வேடத்திலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து இருப்பார்.

அந்த படத்தில் நடிப்பதற்காக சமந்தாவுக்கு ஆடிசன் வைக்கப்பட்டதாம். அதில் கலந்துகொண்ட சமந்தா ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்டு விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கில் நடித்தார்.

அதன் பிறகு, தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என நடித்துக்கொண்டிருந்த சமந்தா தற்போது ஒரு சர்வதேச திரைப்படத்திலும் நடிக்கிறாராம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சமந்தா ஆடிஷனில் கலந்துகொண்டாராம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு தான் கலந்துகொண்ட ஆடிசன் என கூறியுள்ளார் சமந்தா.

ஏ அரேஞ்மென்ட் ஆஃப் லவ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் என்பவர் இயக்க உள்ளாராம். சமந்தா நடிக்க உள்ள தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.விரைவில் படத்தை பற்றிய அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

8 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago