குடும்பத்துல ஒருத்தர்…மனசு கஷ்டமா இருக்கு! சேஷு குறித்து சந்தானம் உருக்கம்!!

Published by
பால முருகன்

RIPSeshu : மறைந்த நடிகர் சேஷுவிற்கு சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

லொள்ளு சபாவில்  நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சேஷு. இவர் அடுத்ததாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். துள்ளுவதோ இளமை, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

60-வது வயதான இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு சினிமா துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னையில் சேஷுவின் அவருடைய உடல் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகர் சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சந்தானம் ” எங்களுடைய லொள்ளு சபா குடும்பத்தில் இருந்த ஒருத்தர் சேஷு. அவருடைய மறைவு செய்து இப்படி வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

அவர் மறைவு செய்தியை கேட்டு இவ்வளவு பேர் வந்து இருக்கிறோம். அவர் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி என்னை பொறுத்தவரை அவர் நல்ல மனிதர். படத்தின் பேச்சுவார்தைகாக நாங்கள் வெளியே சென்று இருந்தோம் அந்த சமயத்தில் இப்படி ஒரு தூயரமான செய்தி எங்களுடைய காதில் வந்தது வேதனை அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனவும் நடிகர் சந்தானம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

5 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

5 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

7 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

7 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

8 hours ago