சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததற்கு இத்தனை நாள் சம்பளம் தராதற்கு வட்டி சேர்த்து தரவேண்டும் என ஹீரோ அரவிந்த் சாமி கூறுகிறாராம்.
H.வினோத் இயக்கத்தில் 2014இல் வெளியாகி நல்ல வெற்றியையும், பலரது பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த பெரிய மோசடிகளை தோலுரித்து காட்டியது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில வருடங்களுக்கு முன்னர் அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து தொடங்கப்பட்டது. சதுரங்க வேட்டை-2 என தலைப்பு வைக்கப்பட்டு நிர்மல் குமார் என்பவர் இயக்கி வந்தார். திரிஷா ஹீரோயினாக நடித்து வந்தார்.
இந்த படத்தின் வேலைகள் கடந்த 2,3 வருடங்களாக நடைபெற்று வந்ததால், அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி இருந்துள்ளது. இதனால், அவரும் டப்பிங் பேசாமல் இருந்து வந்தார். கடைசியில் ஒரு பைனான்சியர் முன்னிலையில் சம்பளம் 50 லட்சம் என பேசி இறுதி செய்யப்பட்டதாம். அதற்கு அரவிந்த் சாமியும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கடைசியில், அரவிந்த் சாமி அந்த 50 லட்சம் சேர்த்து இத்தனை நாள் தராததற்கு வட்டி போட்டு தர வேண்டும் என கூறிவிட்டாராம். சம்பள பாக்கிக்கு வட்டி கேட்ட கோலிவுட் நடிகர் இவர் தான் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…