வயதானவரை தள்ளிவிட்ட பாதுகாவலர்! மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா!

Published by
பால முருகன்

நாகார்ஜுனா : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் நாகார்ஜுனா தற்போது தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபத்திற்கு விமானம் மூலம் தனுஷ், நாகார்ஜுனா நேற்று சென்றார்கள்.

அப்போது விமான நிலையத்தில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தது. அது என்னவென்றால், நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் நடந்து கொண்டு செல்லும்போது நாகார்ஜுனா தீவிர வயதான ரசிகர் ஒருவர் கையை பிடித்து அவரை சந்திக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த பாதுகாவலர் இறக்கம் கூட இல்லாமல் அந்த வயதானவரை தள்ளிவிட்டார்.

தள்ளிவிட்டதில் அந்த வயதானவர் கீழே விழுந்தார். ஆனால், இதனை நாகார்ஜுனா கண்டுகொள்ளாதது,போல வீடியோ காட்சி பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்த நிலையில், வீடியோவை பார்த்த பலரும் இதனை கூட கண்டுகொள்ள மாட்டீர்களா? நாகார்ஜுனா ரொம்ப மோசம் என விமர்சிக்க ஆரம்பித்தனர்.

வீடியோ வைரலாகி விமர்சனங்கள் எழுந்த நிலையில், நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றையும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” இது நடந்திருக்கக் கூடாது என்று என் கவனத்துக்கு வந்தது!! நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்” என நாகார்ஜுனா கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago