உலகம் ஃபுள்ளா “கங்குவா” பத்திதான் பேசுவாங்க: பில்டப் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்.!

Published by
பால முருகன்

சென்னை : கங்குவா படம் வெளியான பிறகு ஒரு மாதம் படத்தை பற்றி தான் உலகம் முழுவதும் பேசுவார்கள் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடித்து வரும் கங்குவா படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆக 12-ஆம் தேதி படத்திற்கான டிரைலர் வெளியானது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் வசனங்கள் என அனைத்தும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.

படத்தில் இருந்து வெளியாகும் அப்டேட்கள் ஒரு பக்கம் படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்து வரும் நிலையில், படத்தை பற்றி பிரபலங்களும் பேசி இன்னும் படத்தை அதிக அளவில் ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் கங்குவா படம் குறித்து பேசி பில்டப்பை கிளப்பி இருக்கிறார்.

சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் அவர் பேசியதாவது ” கங்குவா படத்தை பற்றி என்னால் உறுதியாக சொல்ல கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் உலகம் முழுவதும் அந்த படத்தை பற்றி தான் பேசுவார்கள்” என கூறினார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் ஹாலிவுட் மார்வெல் படங்களுக்கு கூட இப்படி ஒரு பில்டப் இருந்திருக்காது.. நம்மாளுங்க பில்டப் பண்ணுவதற்கு மட்டும் தான் என கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் அந்த பேட்டியில் தொடர்ந்து பேசிய தனஞ்செயன் ” இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கங்குவா படம் பேசப்படும் ஏனென்றால் அந்த அளவுக்கு இயக்குனர்கள், படத்தில் நடித்த பிரபலங்கள், இசையமைப்பாளர் என அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள். அவர்களின் உழைப்பும் பேசப்படும் ” எனவும் வெளிப்படையாகவே பேசினார். நெட்டிசன்கள் கலாய்ப்பதை பார்த்த சூர்யா ரசிகர்கள் படம் வரட்டும் சார் அது வரை இப்படி பேசவேண்டாம் எனவும் கூறிவருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

13 minutes ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

8 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

8 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

10 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

11 hours ago