துருவ் விக்ரமுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு காதல் கதை கூறியுள்ளார். விரைவில் இருவரும் இணையும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதன் முதலாக நடித்த வர்மா திரைப்படம் படக்குழுவினருக்கு திருப்தி அளிக்காததால், மீண்டும் வர்மா திரைப்படம் வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என எடுக்கப்பட்டது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது.
இவர் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து மஹான் எனும் படத்தை எடுத்து முடித்துள்ளனர்.
அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாக கொண்ட ஒரு படம் தயாராக இருந்தது. ஆனால், மாரி செல்வராஜ் தற்போது உதயநிதியை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார். அதனால் அது முடிந்த பிறகே துருவ் விக்ரமை வைத்து படம் இயக்குவார் என கூறப்படுகிறது.
அதற்கிடையில், ஒரு படம் நடிக்க நினைத்த துருவ் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் துருவ்க்கு ஒரு காதல் கதை கூறியுள்ளாராம்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…