Categories: சினிமா

விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் – விஷால் பேச்சு.!

Published by
கெளதம்

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலரும் கேப்டனின் நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களுடைய மரியாதையையும் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று ஜனவரி (19) சென்னை காமராஜர் அரங்கத்தில் விஜயகாந்தின் மறைவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், கமல்ஹாசன், கருணாஸ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் பங்கேற்று கேப்டன் விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல்…உருக்கமாக பேசிய பிரபலங்கள்!

அந்த வகையில், விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய அவர், “விஜயகாந்த் வாழும்போதே கடவுளாக இருந்தவர். எங்களை மாதிரி’ இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர். தமிழ்நாடு ஒரு தலைவனை மிஸ் பண்ணிடுச்சி. நடிகர் சங்கத்தை மீட்டு ஒரு குடும்பமாக கொண்டுவந்தார்.

இவர் செய்த சாதனைகளை இந்தியாவில் யாரும் செய்ததில்லை” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் உடன் இணைந்து நடிப்பது என் கடமை, அவரது படத்தில் நடிக்க தயார் என நடிகர் விஷால் ஓபனாக கூறியுள்ளார்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

7 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago