பாகிஸ்தானில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான லத்தீப் அப்ரிடி, பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
மூத்த வழக்கறிஞர் மற்ற வழக்கறிஞர்களுடன் பார் அறையில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான டான் தெரிவித்துள்ளது.
உடனடியாக பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.