பள்ளி குழந்தைகளின் சிரமத்தை கண்டு 30 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை.
திரு.சதீஷ் குமார் என்பவர், ஈரோடு மாவட்டம் சித்தோடு என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வளர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை முடித்த நிலையில், தனது கடின உழைப்பால் பன்னீர் வணிகத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.
அதுமட்டுமில்லாமல், பால் வணிகத்தில் ஈடுபட்டு மில்கி மிஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். இந்நிலையில், அவர் பிறந்த கிராமமான, சித்தோடு தொடக்கப் பள்ளியின் கழிப்பறையின் மிக மோசமான நிலையையும், பள்ளி குழந்தைகள் அனுபவிக்கும் சிரமத்தையும் கருத்தில் கொண்டு, அங்கு கழிப்பறை கட்ட ரூ.30 லட்சம் வழங்கியுள்ளார்.
இவரது மனப்பூர்வமான உதவியை கொண்டு, தற்போது அந்த தொடக்கப்பள்ளியில் அட்டகாசமான நவீன கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeunknown nodeunknown node