#BREAKING: பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உத்தரவு..!

முதலாம் அண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு.

முதலாம் அண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு.

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் மாதத்தில் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கவும், இறுதிக்கட்ட கலந்தாய்வு ஜூலை 20 அல்லது அதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்களை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு மாணவர் சேர்க்கை கூடாது எனவும் பொறியியல் வகுப்புகளை நடப்பு கல்வி ஆண்டிலும் நேரடி மற்றும் ஆன்-லைன் வழியில் நடத்திக்கொள்ளலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

unknown node