வரலாறு

வரலாற்றில் இன்று!!

ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்  ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் ஸ்காட்டியக் கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவரது முக்கியமான சாதனை மின்காந்தவியல் கோட்பாடு ஆகும். மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார். மக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கின. இதனைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முன்னைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்கள் ஆயின. மின்காந்தவியலில் மக்ஸ்வெல்லின் பணி இயற்பியலில் இரண்டாவது பெரிய ஒன்றிணைப்பு எனப்படுகின்றது. இவர் 1831ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பிறந்தார். […]

#Maxwell 4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று!! நடிகை பத்மினி..

பத்மினி: திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர். மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் […]

actor 4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று:உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்..!

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ.வின் உடன்படிக்கைகளின் ஏற்பினால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. […]

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று! லாலு பிரசாத் யாதவ்..

லாலு பிரசாத் யாதவ்: லாலு பிரசாத் யாதவ் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.இவர் 1947ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பிறந்தார். இவர் பீகாரின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். இவர் மீது எதிர்கட்சிகள் பல்வேறு குற்றங்களை சுமத்தினாலும் பீகார் மக்கள் இவரை ஹீரோவாக தான் பார்க்கிறார்கள் சுகுமாரன்: […]

central governmrnt 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று…

வே. தில்லைநாயகம் வேதி என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் (சூன் 10, 1925 – மார்ச் 11, 2013) தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர். கன்னிமாரா பொதுநூலகத்தின் முதல் தொழில்புரி (Professional) நூலகர்; தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்புரி நூலக இயக்குநர். இவர் ஜூன் 10ம் தேதி1925 ம் ஆண்டு பிறந்தார். பியுஷ் ‘பாபி’ ஜிண்டல் பியுஷ் ‘பாபி’ ஜிண்டல் அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்பள்ளியிலிருக்கும் பொழுது கத்தோலிக்க சமயத்துக்கு […]

america 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று! ஆன்ட்ரூ சைமன்ஸ்

கிரண் பேடி இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார். 1971ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். 1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி 1994ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது. 2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார் 2011இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் […]

#BJP 6 Min Read
Default Image

வரலாற்றில் இன்று..ஷில்பா ஷெட்டி!

ஷில்பா ஷெட்டி இவர் 1975ம் ஆண்டு ஜூன் 8 அன்று பிறந்தார். ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். பாஜிகர் (1993) திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து அவர் 40 திரைப்படங்களை நெருங்கிவிட்டார். 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக் திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் அவர் நடித்தார். ஷில்பா தனது நடிப்புத் தொழிலில் இருந்து பலமுறை புறக்கணிக்கப்பட்டாலும் தன் திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்தார். தத்கன்  மற்றும் ரிஷ்தே ஆகிய திரைப்படங்களில் அவருடைய பாத்திரங்கள் பாராட்டப்பட்டன. பிர் மிலேங்கே  திரைப்படத்தில் அவர் எயிட்ஸ் நோயாளியாக நடித்ததற்காக பல விருதுகளைப் பெற்றார். அவரது […]

#Srilanka 5 Min Read
Default Image

வரலாற்றில் இன்று : இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தது..!

* 1967 – இஸ்ரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர். * 1981 – இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன. * 1989 – சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர். * 1991 – பிலிப்பைன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயரத்திற்கு அதன் தூசிகள் பறந்தன. * 2000 – கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அமைச்சர் சி. வி. […]

வரலாற்றில் இன்று : இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தது..! 2 Min Read
Default Image

புகையிலையை ஒழிப்போம் ! புற்றுநோயை தடுப்போம்..!

உலகில் உள்ள மக்கள் அதிக அளவில் புகைபிடிப்பதாலும், புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவதாலும் ஆண்டுக்கு 35 லட்சம்பேர் மரணத்தை தழுவுகின்றனர். மனித இறப்புகளை தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இதை தவிர்ப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் 1987-ம் ஆண்டு முதல் மே மாதம் 31-ந்தேதியை புகையிலை எதிர்ப்பு தினமாக அறிவித்து விழிப்புணர்வு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. புகையிலையினால் ஏற்படும் தீமைகளை 1950-ம் ஆண்டுகளிலிருந்தே மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் எடுத்து கூறி வருகின்றனர். ஆனாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை. எனவே […]

HIRTORY TODAY 5 Min Read
Default Image

வரலாற்றில் இன்று! டைட்டானிக் கப்பல்..,

டைட்டானிக் கப்பல்: ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முழுவதுமாக மூழ்கியது.டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் […]

#Ship 4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று..,

1453 – ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர். 1660 – இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான். 1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1864 – மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான். 1886 – வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.1919 – ஐன்ஸ்டீனின் சார்புக் […]

#Srilanka 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று!

1588 – 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. 1737 – வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார். 1905 – ரஷ்ய-ஜப்பானியப் போர்: சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது. 1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை […]

#Japan 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று! ரைட் சகோதரர்கள்..,

கிமு 334 – மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர். 1809 – வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன. 1844 – பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது. 1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர். 1942 – இரண்டாம் உலகப் போர்: […]

#Srilanka 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று!! வேலுப்பிள்ளை பிரபாகரன்..,

1955ஆம் ஆண்டு – உலக சாதனை ஜோடி: 1955ஆம்ஆண்டுஆஸ்திரேலியாமற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாஅணி முதல் இனிங்ஸில் 668 ரன்களை  எடுத்தது. அதன் பின் களமிறங்கியமேற்கிந்திய தீவுகள் அணி  147 ரன்களுக்கு  6 விக்கட்டுகளை இழந்து சற்றுதடுமாறியது. அப்பொது ஜோடி சேர்ந்த மேற்கிந்திய தீவுகள்அணியின் தலைவர் டெனிஸ் எட்கின்சன் மற்றும் விக்கட் கீப்பர் டெபெசா ஆகியோர்7ஆவது விக்கட்டுக்காக 347 ஓட்டங்களை சேர்ந்து எடுத்தனர். இது டெஸ்ட் கிரிக்கட்வரலாற்றில் 7ஆவது விக்கட்டுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ரன்களாகும் . இது இடம்பெற்று தற்போது வரை 61 வருடங்கள் கடந்தும் இந்தசாதனையை எவராலும்  முறியடிக்கப்படவில்லை.   வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17] அல்லது மே 18[ இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமி] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள்ழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண […]

#Cricket 5 Min Read
Default Image

வரலாற்றில் இன்று ! வாஸ்கோ ட காமா..,

வாஸ்கோ ட காமா : ஒரு போர்ச்சுகீசிய நாட்டை சேர்ந்தவர்  ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக்கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுநர் ஆனார்.1498 ம் ஆண்டு மே 17  ல் வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார். முதலாம் நெப்போலியன்: நெப்போலியன் பொனபார்ட்அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில்ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் […]

first nepolian 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று ..! அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்த நாள்..!

ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1124 – முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான். 1296 – இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான். 1521 – நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். 1522 – மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் […]

27-04-2018 9 Min Read
Default Image

வரலாற்றில் இன்று ஏப்ரல் 26-அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்!

ஏப்ரல் 26 கிரிகோரியன் ஆண்டின் 116 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 117 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 249 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான். 1805 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர். 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரோலினாவின் டேர்ஹம் […]

april 26 6 Min Read
Default Image

வரலாற்றில் இன்று :ஏப்ரல் 24 -முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகம்..ஜெயகாந்தன்,சச்சின் பிறந்த தினம் !

ஏப்ரல் 24  கிரிகோரியன் ஆண்டின் 114 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 115 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1704 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது. 1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1877 – ஓட்டோமான் பேரரசு மீது ரஷ்யா போரை அறிவித்தது. 1908 – லூசியானாவில் புயல் காரணமாக 143 […]

24-04-2018 8 Min Read
Default Image

வரலாற்றில் இன்று : உலக புத்தக பதிப்புரிமை நாள் !

ஏப்ரல் 23 கிரிகோரியன் ஆண்டின் 113 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 114 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 252 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1343 – எஸ்தோனியாவில் ஜெர்மனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர். 1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1639 – புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது. 1660 – சுவீடன், மற்றும் போலந்து ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட […]

april 23 8 Min Read
Default Image

வரலாற்றில் இன்று: மார்ச் 22 உலக நீர் நாளாகும் !!

மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1622 – வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர். 1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன. 1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது. 1895 – […]

gemini 5 Min Read
Default Image