கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை இதன் அறிகுறியாகும். அந்த வகையில், இன்று காலையில் முதலாவதாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டது. பின்னர், ஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சென்னையில் 2 குழந்தைகளுக்கும் இந்த புதிய HMPV […]
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர் விட செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து இஸ்ரோ ஆய்வு ஒன்றை இஸ்ரோ நடத்திருக்கிறது. அட ஆமாங்க… பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆராய்ச்சிக்கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றியடைந்துள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் […]
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து முடிந்து திரும்பும்போது நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து ஐஈடி வெடிகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இந்த குண்டுவெடிப்பில் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் 5 […]
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. முதலில் மற்ற நாடுகளில் இந்த தொற்று காணப்படவில்லை என்று கூறினாலும், இந்தியாவில் 3 HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியிருத்த அதே வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போதும் மாநில அரசுகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கர்நாடகாவில் 2 HMPV வைரஸ் தொற்றுகளும், குஜராத்தில் […]
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும் மறக்க இயலாது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் இருந்து தான் பரவியது. அதே போல தற்போது Influ A, HMPV வைரஸ்கள் அங்கு பரவுகின்றன. இதனை வெளி உலகத்திற்கு சீனா மறைக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பதை […]
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உறுதி செய்துள்ளது. சீனாவில் அதிகளவில் பரவி வரும் இந்த வைரஸ், பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கும், 3 மாத பெண் குழந்தைக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த வைரஸ் அவர்களுக்கு […]
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாவேலிக்கரையில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை […]
பஞ்சாப் : மாநிலத்தின் முக்கிய விவசாயத் தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. 41வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அவர், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். எதற்காக போராட்டம்? ஜக்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருவதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு 2020-ல் அறிமுகப்படுத்திய புதிய விவசாய சட்டங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து தான். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ […]
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5) குஜராத்தின் போர்பந்தரில் வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட மொத்தம் 3 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தில் மூவரும் உயிரிழந்ததாக ஐசிஜி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மதியம் 12:10 மணியளவில் நடந்ததாக போர்பந்தர் காவல்துறை கண்காணிப்பாளர் பகீரத்சிங் ஜடேஜா […]
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ரூ12,200 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது பற்றி பார்ப்போம்.. முதலில், ரூ. 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் சாகிபாபாத் முதல் நியூ அசோக் நகர் இடையே பாரத் வழித்தடத்தின் 13 […]
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது. விரைவில் அவற்றில் இருந்து இலைகளும் வெளியேறும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இது விண்வெளியில் விவசாயம் செய்யும் முயற்சியின் முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்தச் சோதனையின் வெற்றி, விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் இந்தியாவின் திறனைக் காட்டுகிறது. இந்த சோதனையானது, குறைந்த […]
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி60 ரக ராக்கெட் (PSLV C60 rocket) ஏவப்பட்டது. செயற்கைகோள் இணைப்பு சோதனைக்காக (Space Docking Experiment) SDX01 மற்றும் SDX02 எனும் இரு செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து சென்றது. இதில், ஏவப்பட்ட POEM-4 ரோபோட்டிக் கை விண்ணில் செயல்பட தொடங்கியுள்ளது என தற்போது இஸ்ரோ வீடியோ ஒன்றை வெளியீட்டு நெகிழ்ச்சியாக அறிவித்துள்ளது. இதற்கு […]
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐயப்பபக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அதிக கூட்ட நெரிசல், வாகன நெரிசலை அடுத்து சாலை மார்க்க வழித்தடங்கள் பல்வேறு சமயங்களில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்த கூட்ட நெரிசலை குறைக்க அங்கு மாற்று வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து வேண்டும் […]
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்குவது வழக்கம். அதே போல இந்தாண்டும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம் பெற்ற பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு. […]
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி தலைமையில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கின்னஸ் சாதனைக்காக சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை காண கேரள அமைச்சர் சஜி செரியன், திருக்காட்கரை காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான மேடையானது சுமார் […]
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து கழகங்களிலும் (எஸ்ஆர்டிசி) பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் (பிஎம்டிசி) உள்ளிட்ட அனைத்து எஸ்ஆர்டிசிக்களுக்கும் ஜனவரி 5 முதல் உயர்த்தப்பட்ட கட்டணம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் […]
கர்நாடகா : தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும் செய்திகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். அப்படி தான், மங்களூரில் தீபிகா என்ற பெண் பூச்சி கடிதத்திற்கு வழக்கு போட்டு ரூ.1.29 லட்சம் இழப்பீடு வாங்கி இருக்கிறார். இந்த வழக்கு குறித்து விவரமாக பார்ப்போம்… கடந்த 2022-ஆம் ஆண்டு தீபிகா என்ற பெண்ணும் அவரது கணவரும் ரெட் பஸ் செயலி மூலம் மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு […]
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமணி முருகேசனுக்கும், வெண்கல பதக்கம் வென்ற மணிஷா ராமதாஸுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கங்கள் வென்ற நித்யஸ்ரீ சுமதி சிவன் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் 4 பேருக்கு அறிவிக்கப்பட்டது. குகேஷ் (செஸ்), ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), மனுபாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்), பிரவீன் குமார் (பாரா […]
டெல்லி: 2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான கேல் ரத்னா, உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹர்மன்பிரீத் சிங்(ஹாக்கி), மனுபாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்) பிரவீன் குமார் (பாரா தடகள வீரர்) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்க உள்ளார். […]
கேரளா : மாநிலத்தின் இன்று காலை குருமாத்தூரில் உள்ள சின்மயி பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்ற நிலையில், பிரேக் செயலிழந்த காரணத்தால் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த போது பேருந்தில் 20 மாணவர்கள் பேருந்தில் இருந்துள்ளனர். அதில் 18 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெத்யா எஸ் ராஜேஷ் என்கிற மாணவன் மட்டும் இந்த விபத்து சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் கவிழ்ந்ததில் ஜன்னல் வழியே விழுந்து பஸ்சின் […]