லைஃப்ஸ்டைல்

Blood Pressure : முருங்கைக்கீரை BP-யை குறைக்குமா…? வாங்க பார்க்கலாம்…!

Published by
லீனா

இன்று பெருமாம்பாலும்  40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் இரத்த முளைத்த பிரச்னை ஏற்படுகிறது.  உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தம் என்பது இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும்போது, ​​தமனிகளில் ஏற்படும் அழுத்ததின் காரணமாக இந்த பிரச்னை ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் 

உயர் இரத்த அழுத்த பிரச்னை வயது அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. அதே சமயம் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் ஏற்கனவே யாருக்காவது இந்த பிரச்னை இருந்தாலும் உயர் இரத்த அழுத்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு, புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு முருங்கை கீரை ஒரு சிறந்த மருந்தாகும்.

முருங்கை கீரையின் நன்மைகள் 

முருங்கை கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையில் உள்ள வைட்டமின் சி உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. முருங்கை கீரையில் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முருங்கை கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

முருங்கை கீரை சூப் செய்வது எப்படி? 

தேவையானவை 

  • முருங்கை கீரை – 5 கொத்து
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 5
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைக் கீரையை உருவி போட வேண்டும். அதில் சீரகம், சின்ன வெங்காயம், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவையான அளவுக்கு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும்வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.  உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை காலையில் இந்த முருங்கைக்கீரை சூப்பை குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும். இது உயர் ரத்த அழுத்த பிரச்சனையை மட்டும் அல்ல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Published by
லீனா

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

6 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

7 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

7 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

8 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

8 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

9 hours ago