லைஃப்ஸ்டைல்

பெண்களே..! உங்கள் சமையலறையில் இந்த 5 பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்..!

Published by
லீனா

பொதுவாக மழைக்காலங்களில் நமக்கு பலவகையான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. காய்ச்சல், சளி, இருமல், ஜலதோஷம், தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் என பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கம். இந்த தொற்று நோய்களுக்கு நம்முடைய முன்னோர்கள் தங்களது வீட்டிலேயே கைமருத்துவம் செய்து சாப்பிடுவது வழக்கம்.

ஆனால் தற்போது நாம் மருத்துவமனைகளுக்கு தான் அடிக்கடி சென்று வருகிறோம். மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது முக்கியமென்றாலும், வீடுகளில் நமக்கு முதலுதவி சிகிச்சைக்காக இயற்கையான முறையில் சிகிச்சை எடுக்க கூடிய பல்வேறு வழிகள் உண்டு. குறிப்பாக மழைக் காலங்களில் நோய் தொற்றுகள் பரவாமல் தடுப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு வீட்டு மருத்துவங்களை மேற்கொள்வது வழக்கம் தற்போது இந்த பதிவில் மழைக்காலங்களில் நம்முடைய சமையலறையில் இருக்க வேண்டிய ஐந்து முக்கியமான பொருட்கள் பற்றி பார்ப்போம்.

இஞ்சி

ginger [Imagesource : Timesofindia]

இஞ்சி என்பது பொதுவாக நாம் நமது பெரும்பாலான சமையல்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள். இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ், பாரடோல்ஸ், செஸ்கிடர்பீன்ஸ், ஷோகோல்ஸ் மற்றும் ஜிங்கரோன் ஆகியவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இது சளி மற்றும் காய்ச்சலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கருமிளகு 

milaku [Imagesource : Representative]

கருமிளகில் பலவகையான இயற்கை ஆரோக்கியம் நிறைந்த பண்புகள் உள்ளது. அந்த வகையில், குடல் வாயு மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைப்பதோடு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காய்ச்சலை குறைக்கும் தன்மை கொண்டது.

மஞ்சள் 

termeric [Imagesource : Representative]

மஞ்சள் நமது உடலில் பல பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சிறந்த மூலிகை ஆகும். அந்த வகையில், மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பூண்டு 

garlic {[Imagesource ; Indiacom]

பூண்டு நமது அனைத்து சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருள் ஆகும். பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

துளசி 

thulasi [ Imagesource : Representative]

துளசி இயற்கை மருத்துவத்திற்கு ஒரு சிறந்த மருந்து ஆகும். துளசி உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இந்த துளசியை பயன்படுத்தி தேநீர் செய்து குடித்து வந்தால், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

Published by
லீனா

Recent Posts

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

12 minutes ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

56 minutes ago

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…

2 hours ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழா : விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…

3 hours ago

அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…

3 hours ago

வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்…பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…

4 hours ago