chadney [Imagesource : representative]
நம்மில் பெரும்பாலானோர் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசை போன்ற உணவுகளை தான் பெரும்பாலும் செய்வதுண்டு. இந்த உணவுகளுக்காக நாம் சட்னி செய்வதுண்டு. அந்த சட்னி தான் நாம் செய்யும் உணவுக்கே சுவை சேர்க்க கூடிய ஒன்று என சொல்லலாம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஹோட்டலில் செய்வது போல அசத்தலான காரச்சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை
பூண்டு – 10 பல்
வரமிளகாய் – 10
காஷ்மீரி சில்லி – 4
பெரிய வெங்காயம் – 2
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
புலி – ஒரு துண்டு
உப்பு – தேவையான அளவு
பொட்டுக்கடலை – 3 ஸ்பூன்
வேர்க்கடலை – 2 ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, 10 பல் பூண்டு, வர மிளகாய் 10, காஷ்மீரி சில்லி 4, பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கியது, புதினா,கொத்தமல்லி, புளி ஒரு துண்டு , பொட்டுக்கடலை 3 ஸ்பூன், வேர்கடலை, தேவையான அளவு ஆகியவற்றை போட்டு சிறிதளவு எண்ணெயில் தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அதனுள் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அறைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, நறுக்கிய வெங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு வதக்கிய பின்பு அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது கொதிக்க விட்டு இறக்கிவிட வேண்டும். இந்த சட்னியை இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…