லைஃப்ஸ்டைல்

உடல் எடையை குறைக்கணுமா..? வாரத்திற்கு ஒரு நாள் இந்த சூப் குடிச்சா போதுங்க..!

Published by
லீனா

நமது முன்னோர்கள் இயற்கையாக விளையக்கூடிய உணவுகளை கொண்டு, வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிட்டு வாழ்ந்தனர். அவர்களது ஆயுட்காலமும் கெட்டியாக இருந்ததோடு,  நோய் நொடியின்றி வாழ்ந்தனர். ஆனால், இன்று உணவுப்பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஃபாஸ்ட்புட் உணவுகளை தான் விரும்பி உட்கொள்கின்றனர்.

இதனால் இன்று பெரும்பாலானோர், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் நமக்கு ஏற்படக் கூடிய உடல் ரீதியான பிரச்னைகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண முயல்வது நல்லது.

புராக்கோலி சூப் 

புராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. புராக்கோலியில் உடல் ஆரோக்கியத்தை மேம்படும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது.

புராக்கோலி சூப்பை தினமும் குடித்து வந்தால் உடல் எடை பிரச்சினை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், இதயம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது எனவே இந்த சூப்பை வாரத்திற்கு ஒரு நாள் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  தற்போது இந்த பதிவில், புராக்கோலியை வைத்து சூப் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம் .

தேவையானவை 

  • கடலை எண்ணெய் – 2 ஸ்பூண்
  • சீரகம் – கால் ஸ்பூன்
  • வெள்ளை பூண்டு – 3 பல்
  • தக்காளி – 1
  • பெரிய வெங்காயம் – 1
  • புராக்கோலி – 300 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • பிரியாணி இலை – 1
  • மிளகு தூள் – கால் ஸ்பூன்

செய்முறை 

முதலில் நமக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் புராக்கோலியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கரண்டி கடலை எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம், வெள்ளை பூண்டு, தக்காளி,  பெரிய வெங்காயம் சிறிதளவு உப்பு போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனுள் நறுக்கி வைத்துள்ள புராக்கோலியை போட்டு இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அதன் பின் அதனை எடுத்து ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி கடலை எண்ணெய் ஊற்றி, ஒரு பிரியாணி இலையை போட்டு, அரைத்து வைத்துள்ள இந்த கலவை அதனுள் ஊற்றி சிறிதளவு மிளகுத்தூள் தூவி நன்கு கிளறிக் கொள்ளவேண்டும். பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறினால் சுவையாக இருக்கும்.  

Published by
லீனா

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

5 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago