தல அஜித்தின் அடுத்த படம் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ஆகும்.ஆனால் தற்போது என்னவென்றால் இந்த படத்தின் இசை அமைப்பாளர் குறித்து அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார் என்ற தகவலை அந்த படக்குழு உறுதி செய்துள்ளது.
தற்ப்போது திரையுலகில் நடிகரும் இசையமைப்பாளர் ஆனா விஜய் ஆண்டனி நடித்துள்ள அண்ணா துரை படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.இந்த படம் விஜய் ஆண்டனியின் சொந்தத் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த படத்தின் பாடல்கள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகின்றன. அவற்றை www.vijayantony.com என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை தன்சிகா நடித்து சமீபத்தில் வேயளியான திரைப்படம் ‘விழித்திரு’ இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்தாலும்வசூலில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தன்சிகா இதுபற்றி கோபமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது ” தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாவதில் மட்டுமே வேலைகள் நடந்தது எங்கள் படத்தை கவனிக்கவில்லை. காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்பது தான் எனக்கு அப்போது புரிந்தது.” என விஜய் படத்தை பற்றி தன்ஷிகா கோபமாக குற்றம் […]
நடிகர் கார்த்தி “சினிமாவில் கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே கதை தேர்வில் நான் கவனமாக இருக்கிறேன். நல்ல கதையாகவும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தில் இருந்து ஒவ்வொரு கதையும் எனக்கு வித்தியாசமாகவே இருந்தது மற்றும் நான் நடித்த ,நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மாதிரியும் ‘சிறுத்தை’ படத்தில் இன்னொரு மாதிரியும் வந்தேன். காஸ்மோரா படத்தில் வேறொரு […]
மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும்,இயக்குனரும் ஆன பார்த்திபன் அவர்கள் படத்தின் வசூல் பற்றி கூறியிருந்தார். அதாவது அவர் படம் கண்டிப்பாக 215 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று கூறியிருந்தார். அது தற்போது நிறைவேறியுள்ளது .இந்நிலையில் பார்த்திபன் அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட தளபதி இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மேலும் அவர் சரியாக கூறியது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனா ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியான் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘வர்மா’. இப்படத்தை பாலா இயகுகிறார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ -யின் தழுவல். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடனே அடுத்த 10 நிமிடத்தில் விக்ரம் ரசிகர்கள் இதற்க்கு கட்அவுட் வைத்துவிட்டனர். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு அறிமுக நாயகன் படம் அறிவிப்பு வெளிவந்தவுடன் கட்டவுட் வைப்பது இதுவே முதல் முறை. இந்த செயலை செய்தவர்கள் தூத்துக்குடி மாவட்ட விக்ரம் […]
நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள `அறம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாரா இன்று `அறம்’ படத்தை தன் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். கே.கே.நகரில் உள்ள காசி, உதயம் ஆகிய திரையரங்குகளுக்குச் சென்ற நயன்தாரா சிறிது நேரம் படத்தைப் பார்த்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளும் மற்றும் பாராட்டும் தெரிவித்தனர்.
பாலிவுட்டில் முன்னனி நடிகை ஷர்தா கபூர். இவர் ஆஷிக் 2 திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகையானார். இவரது பலமே இவர் மிகவும் எளிமையாகவும், குழந்தைத்தனமாகவும் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரது புகைபடம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாகவும், மோசமாகவும் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது அவர்தானா, இல்லை போட்டோஸாப் செய்து வேறு எவரும் வெளியிட்டுள்ளனரா? என அவரது ரசிகர்கள் […]
கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி பாரத பிரதமர் மோடி ருபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் இதனால் சாமானிய மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இதன் பொருட்டு நடிகர் சிம்பு ஒரு ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். அதன் தலைப்பு ‘தட்றோம் தூக்குறோம்’. இந்த ஆல்பத்தில் Demonstration-ஆல் சாமானிய மக்கள் அடைந்த துன்பத்தை இதில் கூறியிருந்தார். இதனால் தமிழக பாஜகவினர் இவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வைபிருப்பதாக கருதி இவர் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு […]
இளைய தளபதி விஜய் தனது ஒவ்வொரு படமும் வெற்றியடைந்த உடன் நன்கொடை கொடுப்பது வழக்கம் .அதே போல் தற்போது வெளியாகி மிகப்பெரிய பெரிய வெற்றி பெற்ற படம் மெர்சல்.எனவே இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடன இயக்குனர்கள் கலைஞர்கள் சங்கத்துக்கு நன்கொடையாக ரூ.15 இலட்சம் நன்கொடையாக வழங்கிஉள்ளார்.
சியான் விக்ரமை தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக சேது படம் மூலம் அறிமுகபடுத்தியவர் இயக்குனர் பாலா. இவர் தற்போது விக்ரமின் மகன் துருவ்-வை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் உலகநாயகனின் மகள் அக்சராஹாசன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் ரீமேக். இயக்குனர் பாலா ரீமேக் படத்தை இயக்குவது இதுவே முதல் முறை.
திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆனா ப்ரியன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். பொற்காலம் படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் ப்ரியன் ‘ஆனந்தப் பூங்காற்று, மஜ்னு, வல்லவன், ஆறு,மற்றும் சிங்கம் 1, 2, 3’ போன்ற பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். தற்போது சாமி-2 பாகத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.தற்போது இவருடைய மறைவு திரைத்துறையில் இருபவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றுவருகிறது. மேலும் அரசியல்வாதிகளிடம் பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. சரி படம் தான் ரிலீஸ் ஆயிடிச்சே இப்போ எதுக்கு மறுபடியும் மெர்சல்? அப்டினா, இது வேற பிரச்சனை, அது மெர்சல் அந்த படம் மாறி இருக்கு இந்த படம் மாறி இருக்குனு நிறைய பேர் சொன்னங்க. இப்போ ஒருத்தர் அது ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக் அந்த படத்தின் ரீமேக் உரிமை என்னிடம் தான் உள்ளது. என […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரை தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும். அதற்க்கு காரணம் இவர் திரைக்கு பின் எப்போதும் எளிமையாக இருப்பார். அதை பல இடங்களில் வெளிபடுத்துவார். இவர் அண்மையில் ஒரு உணவுப்பொருள் விளம்பரத்தில் நடித்தார். அதில் கிடைத்த மொத்த வருமானத்தையும் மறைந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி உதவிக்காக கொடுத்துள்ளார். இதனை பலரும் பாராட்டிவுள்ளனர். தற்போது பிரபல அரசியல் பிரமுகர் ராமதாஸ் பாராட்டிவுள்ளார்.