அட்லீ க்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்.விஜய்யை வைத்து மெர்சல் படம் இயக்கிய அட்லி மீது நோட்டீஸ் .மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமத்தை வைத்துள்ள பைவ் ஸ்டார் பிலிம்ஸ் புகார்.அட்லீ தனது படங்களில் சத்ரியன், மௌனராகம் போன்ற படங்களின் கதை பின்பற்றி படம் எடுத்ததாக புகார் .
தளபதி விஜய் நடிப்பில் அவரது 50வது திரைப்படமாக வெளிவந்து படுதோல்வி அடைந்த திரைப்படம் ‘சுறா’. இப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூ-டியூபில் வெளியானது. இப்படம் இதுவரை 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் இப்படம் திடீரென யூ-டியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்த போது இப்படத்தை நவம்பர் 10ஆம் தேதியன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளதால் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறுகளை மக்களிடம் கொண்டும் செல்லும் வகையில் “எம்ஜிஆர்” என்ற பெயரில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவாகும் திரைப்படத்தை அ.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால். அவர் இதுவரை தல, தளபதி, சூர்யா, தனுஷ் , கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். தற்போது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்நிலைலயில் அண்மையில் ஒரு பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு படுகவர்ச்சியாக போட்டோ ஒன்றை எடுத்து அனுப்பிவுள்ளார். இந்த அட்டை புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நேற்று நடந்த வருமானவரிதுறையினரின் சோதனை இன்றும் நடைபெற்றுவருகிறது . சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு அலுவலகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 23 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஓரிரு இடங்களில் சோதனை முடிந்துள்ளது. இந்த நிலையில், சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் […]
நடிகர் சூர்யா, விஜய் மற்றும் ரமேஷ் கண்ணா ஒன்றாக நடித்தபடம் ‘ப்ரண்ட்ஸ்’. அப்போது படபிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை நடிகர் ரமேஷ் கண்ணா சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியது ‘பிரண்ட்ஸ் பட ஷூட்டிங் நடக்கும்போது அருகில் தெனாலி ஷூட்டிங்கும் நடந்தது அந்த படத்திலும் நான் நடித்தேன். அப்போது ஜோதிகாவிடம் ‘சூர்யா சார் உங்களை கேட்டார்’ என்பேன். அதற்க்கு அவர்களும் சிரித்து கொண்டே ‘நானும் கேட்டேன்-னு சொல்லுங்க’ என்பார். இதனை கூறியவுடன் விஜய், சூர்யா […]
நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதனை தொடர்ந்து கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டயின்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். D.இமான் இசையமைக்கவுள்ளார். இதன் படபிடிப்பு 3 மாதம் ஒரே ஷெட்டில் முடித்து அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் வெளியாக உள்ளது.
‘தல’ அஜித், விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்த்ததும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி ரம்யாவிடம், அஜித் சாரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று கூற, உடனே அவர் ‘அஜித் சாரும், மணிரத்னம் சாரும் சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கபோவதாக கேள்விபட்டேன். அது பற்றி செய்தி எப்போ வரும்’ என கேட்டுவிட்டார். இதனை தொடர்ந்து அவர் கூறியது சமூகவளைதலங்களில் வைரல் ஆனது.
வைரமுத்து ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் பாடல் எழுதியுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால் ‘ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.இந்நிலையில் அவர் கூறியது இந்த படைப்பு சமூகத்திற்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக அமையும்.தகுதிமிக்கவர் கையிலே இந்த சமுதாயம் இயங்க வேண்டும்.இந்த மையத்தை வைத்து இந்த படம் இயங்குகிறது .அதே போல் அனைத்து துறைகளிலும் தகுதி மிக்கவர்களே […]
தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் மெர்சல் .தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம் பல்வேறு எதிப்புகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.மேலும் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறது.தமிழ் மொழியில் மட்டும் வெளியாகி படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் இந்த படம் தெலுங்கில் அதிரிந்தி […]
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “என்னை அறிந்தால்”. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக விக்டர் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் மிரட்டலாக நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அருண் விஜயின் மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறவேண்டும். ஏனென்றால், இதற்கு முன்பு அருண் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் கூட அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் என்னை அறிந்தால் […]
ஏமாலி டீசர் அதுல்யா ,சமுத்திரக்கனியின் வித்தியாசமான நடிப்பில்
இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில், சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `ஆர்.கே நகர்’இப்படத்தில் நடிகர்கள் ஆனா. வைபவ், சம்பத், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது ,இதனால் இப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா சுமார் 400கோடி செலவில் இந்தியாவிலேயே மிகவும் அதிக பட்ஜெடில் தயாரித்திருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்திற்கு துபாயில் பல கோடி செலவில் இசைவெளியீடு நடத்தியும் படத்தின் பாடல்களுக்கு போதிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் இதுவரை 42லட்சம் பேர் கேட்டுள்ளனர். ஆனால் 2.O படப்பாடலை இதுவரை 25லட்சம்பேர் மட்டுமே கேட்டுள்ளனர். இது படகுழுவிற்கு வருத்தத்தை அளித்துள்ளது. […]
‘தளபதி’விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படத்திற்க்கு தான் முதன் முதலாக டிவிட்டரில் பயன்படுத்தும் இமோஜி கொண்டுவரப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியது, ஆதலால் அடுத்து வரும் பெரிய திரைப்படத்துக்கும் இதனைப்போல் இமோஜி ப்ரோமோசனை பயன்படுத்த மற்ற நடிகர்களும் முயன்று வருகிறார்கள். அதில் ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O படத்திற்கும், தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் 25வது படத்திற்கும் இமோஜி ப்ரோமோசனை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பாகுபலி-க்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் அடுத்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அடுத்து அவர் தேர்ந்தெடுக்கும் காதாபாதிரங்களும் காதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களையே தேர்ந்தெடுக்கிறார். இவர் அடுத்து நடித்துகொண்டிருக்கும் திரைப்படமான ‘பாகமதி’-யில் ஒரு வித்தியாசமான காதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதன் முதல் பார்வை அனுஷ்கா பிறந்தநாளான இன்று வெளியானது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. அதில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அனுஷ்கா உள்ளார்.
நடிகர் கமலஹாசன் அண்மை காலமாக மக்கள் மீதான அக்கறையும், அரசு மீதான எதிர்பையும் வலுவாக தெரிவித்து வருகிறார். தற்போது மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துள்ளது. அதனை வெளியேற்ற மக்களும் அரசும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. இதனால் சென்னை புறநகர் பகுதி மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர். நடிகர் கமலஹாசன் டிவிட்டர் பக்கத்தில் ‘ இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக் கால உதவி செய்யுங்கள். அரசு பணியாளர்களுக்கு இடைஞ்சலோ, […]
இந்தியாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இவர் அடுத்து இயக்கபோகும் விஜய் படத்துக்கு பல மாற்றங்கள் செய்ய உள்ளார். அதில் முக்கியமான ஒன்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஸ்பைடர் பட பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெறாமல் போனதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். மேலும் அனிருத்தை அணுகலாம் என பார்த்தால் அவர் தற்போது தெலுங்கு படங்களில் பிசியாகி இருக்கிறார். அடுத்து விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம்-க்கு […]
நடிகர்களின் கல்யாணம் என்பது ரசிகர்களுக்கு எவ்வளவு சந்தோசமோ அதே அளவு அவர்கள் விவாகரத்து என்பது ரசிகர்களுக்கு சோகத்தை அளிக்கிறது. அந்த வகையில் தற்போது பிரியபோகும் ஜோடி என கோலிவுட்டில் ஒரு செய்தி பரவுகிறது. அது நடிகர் பாபி சிம்ஹா-வும் நடிகை ரேஸ்மி மேனனும். அதனை பற்றி பாபி சிம்ஹாவிடம் கேட்டதற்கு அவர் இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியுற்றார். மேலும் இச்செய்தியில் உண்மையில்லை இந்த ஜோடிக்கு சமீபத்தில்தான் ஒரு குழந்தை பிறந்தது.அதற்குள் யார் பரப்பிய வதந்தி என்று தெரியவில்லை
பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் நிறைய பேர் இருகின்றனர். ஆனால் அந்த பிக் பாஸ்-ஐ பிரபலமடைய வைத்தவர் ஓவியா. இவர் கலந்துகொண்ட வரையில் பிக் பாஸ் டிஆர்பி எங்கேயோ போனது. அதன் பின் தள்ளாட ஆரம்பித்தது. பிறகு எப்படியோ தட்டு தடுமாறி பிக் பாஸ்-ஐ முடித்துவிட்டனர் ஆனாலும் இன்னுமும் ஓவியா ஆர்மி டிவிட்டரில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் நேற்று ‘தளபதி’விஜய் மற்றும் ஓவியா இணைந்து நடிக்கவேண்டும் என ஓவியா ஆர்மி ரசிகர்கள் டிவிட்டரில் #ViVi என்பதை ட்ரெண்ட் […]