கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் தொடர்மழை பெய்து வருகிறது. இதனையடுத்து திருமங்கலம் பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. திருமங்கலம் தாலுகா பகுதிகளில் 58 கண்மாய்களுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள 6 கண்மாய்கள் நிரம்பின.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தும் நோக்கத்தில் திமுக வழக்கு தொடரவில்லை என்று திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் கூறுகையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தும் நோக்கத்தில் திமுக வழக்கு தொடரவில்லை.திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் சின்னம் ஒதுக்கீடு படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகையில் முறைகேடு நடந்தது தொடர்பாக தான் 2 வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது என்று திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் விளக்கம் […]
கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம். வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட […]
டி.எஸ்.பி.சக்கரவர்த்தி தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மேலூர் அருகே சுசேக்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் குற்றங்களை தடுப்பது, மோட்டார் வாகன சட்டங்களை பின்பற்றுவது குறித்து விளக்கப்பட்டது. இந்த முகாமிற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் முன்னிலை வகித்தார்.
மதுரையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாகவும், பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் போலீசார் சார்பாக 3 நாள் சிறப்பு பயிற்சி ஒன்று அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் பேசிய கமிஷனர் தேவாசீர்வாதம் ” பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை சமூக வலைத்தளங்கள் கேள்விக்குறியாக்குகின்றன. என அதை பயன்படுத்தும் போது விழிப்போடு பயன்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். ” என்று கூறியுள்ளார். தற்காப்புக்கலை கற்றுக்கொள்வது குறித்து பயிற்சியாளர் ஸ்ரீராம் பேசினார். இன்று நடக்கும் பயிற்சியில் மாணவர்களும், பேராசிரியர்களும் […]
மதுரையில் உலக வன உயிரின வார விழாவை முன்னிட்டு மதுரை மாநகராட்சி சார்பில் வைகை ஆற்றில் பிளாஸ்டிக் பைகளை அகற்றி தூய்மை பணி நடந்தது. மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் வரும் 7ம் தேதி வரை ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏற்கனவில் தமிழகத்தில் சில ஏரிகள், அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கங்கு கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் 5ம் தேதி முதல் 8ம் தத்தி வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடையை விதித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு மதுரையில் அதிமுகவினரை கண்டித்து திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தினர். அப்பகுதி பொறுப்பாளர் இதற்க்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். எம்.பி சிவா அவர்கள் பேசுகையில், தமிழகம் ஊழலில் சிக்கி கிடப்பதாகவும், அதிமுகவினர் மக்களின் பணத்தை வாங்கியே அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குகிறார்ரகள் என்றும் குற்றம் சாட்டினார்.
கிரானைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கிரானைட் வழக்கில் கிரணைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.கிரணைட் கொள்ளையானது கீழவளவு, கீழையூர், இடையப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட இடங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், கண்மாய்களில் அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதாகவும், வெடிவைத்து சேதப்படுத்தப்பட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் மேலும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்குகள் உட்பட 43 […]
சென்ற வருடம் அரசு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து மக்களின் போராட்டம் பலத்தது. இதற்க்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியர் பாத்திமா வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இதுகுறித்த விசாரணை நடைமுறையில் இருந்ததையடுத்து, வழக்கில் கடந்த மாதம் மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது அந்த வழக்கில் மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு 2வது யூனிட்டுக்காக நிலம் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்ததற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனையடுத்து சிப்காட் […]
நெல்லையில் காரை சேதப்படுத்தியது பற்றிய வழக்கில் கருணாஸ் முன்ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றக் கிளை நாளை விசாரணை நடத்துகிறது. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம். வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி. காலதாமதம் ஏற்பட்டாலும் எய்ம்ஸ் நிச்சயம் அமையும் .அதேபோல் தமிழகத்தில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் 16வது மாவட்ட மாநாடு, பேரணி, பொதுகூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் புதிய அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்குவது,ஆரம்ப சுகாதரங்களை மேம்படுத்துவது,மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவது,வடபழஞ்சி ஐடி பூங்கா பணிகளை துரிதப்படுத்துவது,எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி […]
மதுரையில் கே.புதூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 28ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. இதில், பத்தாம் வகுப்பு, பட்ட படிப்பு, தொழிற்கல்வி முடித்த பட்டதாரிகள் சான்றுதல்களுடன் கலந்து கொள்ளலாம். இதில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறியுள்ளார்கள். துணை இயக்குனர் மகாலக்ஷ்மி இதற்கான ஏற்பாடுகளை சேத்துள்ளார்.
மதுரையில் செவ்வாய்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மழையால் மதுரையில் சாலைகளெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்புள்ளாகியுள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக் , நாடாளும் மக்கள் கட்சி பெயர் மாற்றப்பட்டு புதிதாக உருவாக்கி வருகின்ற தேர்தலில் களம் காண்போம் என்றார். மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக் , நாடாளும் மக்கள் கட்சி பெயர் மாற்றப்படுகிறது .அது குறித்து ஆலோசனை செய்து விட்டு இப்போது ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம். இன்னும் இரண்டு நாட்களில் முடிவு பண்ணிடுவோம்.முக்கியமாக அதுக்குத்தான் நானும் இங்கே வந்து இருக்கேன்.இரண்டு நாட்களில் உங்க எல்லாரையும் அழைத்து […]
காதலன் தனது ஏழ்மையைக் கண்டு தன்னை புறக்கணித்ததால் பேரீச்சம்பழத்தில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை , மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரைச் சேர்ந்தவர் சிந்துஜா. இவர் மதுரை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வரும் இவருக்கும் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலை சேர்ந்த கல்லூரி மாணவரான ராம்குமாருடன் நட்பு ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக படிக்கிற சாக்கில் மதுரையை வலம் வந்த […]
வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் குடிநீர் பாக்கெட் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து விலக்கு அளிக்க கோரிய வழக்கில் மாநில அரசின் முதன்மை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர,மக்காத பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் , 1986-ன் கீழ் தடை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவு […]
மதுரை விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்று காலை மதுரையில் இருந்து கொழும்பு புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகள் குடியேற்றச் சோதனை, உடைமைகள் சோதனை ஆகியவற்றை முடித்து விமானத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்த விமானத்தில் வெளிநாட்டுப் பணம் கொண்டு செல்லப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் மதுரை சுங்கத்துறை நுண்ணறி பிரிவு அதிகாரிகள் விமானத்துக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது விமானத்தில் இருந்த […]