இன்று பிரணாப் முகர்ஜி நினைவு நாள்;”அவர் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர்” – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…!

Published by
Edison

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தை, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள்,கடந்த 31.08.2020 அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில்,அவர் இறந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில்,அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த வகையில்,முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்,மறைந்த பிரணாப் முகர்ஜி அவர்களின்,முதல் நினைவு சொற்பொழிவில் கூறியதாவது:

“இந்திய ஜனாதிபதியின் மிக உயர்ந்த அரசியலமைப்பு இடத்தை அடைவதற்கு முன்பு, அவர் 5 தசாப்தங்களுக்கு மேலாக நீண்ட மற்றும் புகழ்பெற்ற அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர்.

அவர் மத்திய அரசாங்கத்தின் அமைச்சகங்களில் பல முக்கிய பதவிகளை வகித்தார். அவர் வகித்துள்ள அனைத்து நிலைகளுக்கும், அவர் மகத்தான ஞானம், ஆழ்ந்த அறிவு, பொது வாழ்க்கை மற்றும் தலைமைத்துவ திறன்களின் விரிவான அனுபவம் மூலம் பரந்த அளவிலான பிரச்சினைகளில் அரசாங்கத்தின் முக்கியமான முடிவுகளை முன்னெடுத்து வந்தார்”,என்று தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து,பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில்:”பிரணாப்முகர்ஜி அவர்கள் பங்களாதேஷின் உண்மையான நண்பர் மற்றும் துணை கண்டத்தின் சிறந்த அரசியல் சின்னம். இந்த உயரிய ஆளுமையின் நினைவு நாளில் அவரது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். பங்களாதேஷ் மீது பிரணாப் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

32 minutes ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

1 hour ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

19 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

19 hours ago