அரசுத் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதாவை நேற்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தால் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் மசோதாவை ராஜஸ்தான் அரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. ராஜஸ்தான் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கான (REET) வினாத்தாள் கசிவு குறித்து பெரும் பிரச்சனைக்கு பிறகு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களைத் தடுக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபர் பொதுத் தேர்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவுசெய்யப்பட்ட, நகலெடுக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்திற்கு குறையாத அபராதம் என்று மசோதா கூறுகிறது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…