மஹாராஷ்டிராவில் சட்டசபை தலைவரை தகாத வார்த்தைகளால் பேசிய 12 பாஜக எம்எல்ஏ-க்கள் ஒரு ஆண்டிற்கு சஸ்பெண்ட் …!

Default Image

மஹாராஷ்டிராவில் சட்டசபை தலைவரை தகாத வார்த்தைகளால் பேசிய 12 பாஜக எம்எல்ஏ-க்கள் ஒரு ஆண்டிற்கு சஸ்பெண்ட்.

இன்று முதல் 2 நாட்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், சபாநாயகர் பதவியில் இருந்த பட்டோலி ராஜினாமா செய்ததால் இடைக்கால சபாநாயகராக பாஸ்கர் ஜாதவ் செயல்பட்டு வருகிறார்.

இதனையடுத்து, சட்டசபையில் மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.  இதனால், சபாநாயகர் சட்டசபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் தற்காலிக சபாநாயகரான பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்று, சபாநாயகரை அவதூறான வார்த்தையால் பேசிய நிலையில், கடும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அமளியில் ஈடுபட்டதாக கூறப்படும் பராக் அலவானி, ராம் சத்புட், சஞ்சய் குட், ஆஷிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், ஷிரிஷ் பிம்பிள், ஜெய்குமார் ராவல், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, மற்றும் கீர்த்திகுமார் பகடி ஆகிய 12 பேரை   ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump