karnataka accident [file image]
கர்நாடகா : மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் பியாடகி தாலுகாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது மினிபஸ் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர். 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஹாவேரி மாவட்டம் குண்டேனஹள்ளி கிராசிங் அருகே அதிகாலை 3.45 மணியளவில் மினி பேருந்தில் 17 பேர் பயணம் செய்தனர். அப்போது, புனித யாத்திரைக்காக பெலகாவி மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மினி பஸ்ஸின் டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், விபத்து குறித்து தெளிவான காரணம் வெளியாகவில்லை என்பதால் கூடுதலாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விபத்தில் பலியானவர்கள் ஷிவமொக்காவை சேர்ந்தவர்கள் என்றும், பெலகாவி மாவட்டத்தில் உள்ள சவதாட்டியில் இருந்து யாத்திரை சென்று யல்லம்மா தேவியை தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்றும் போலீசார் தகவலை தெரிவித்தனர்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…