அமேசான் நிறுவனம் 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஒரு அதிரடியான அறிவிப்பை அறிவித்துள்ளது ,இந்தியாவில் 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது, இது கொல்கத்தா, புனே, கோயமுத்தூர், நொய்டா, இந்தூர், ஹைத்ராபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூர், லக்னோ, போபால், ஆகிய 11 நகரங்களில் அறிவிக்கப் பட்டுள்ளது மேலும் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு வரும்காலத்திற்கு மிகவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வேலைக்கு 12ம் வகுப்பு முடித்திருந்தால் கூட போதும் ஆனால் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் இரண்டில் ஒன்றினை சகஜமாக பேச வேண்டும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேளையில் ஈடுபடுவதால் மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது .
இது தற்காலிக வேலை என்றும் 6 மாத காலம் வரையில் இதற்கு அவகாசம் வழங்கப்படும் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது ,அப்படி என்னவேலை என்றால் சமூகத்தில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் மெயில்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் , இதைப் பற்றி தெரிந்தவர்கள் இருந்தால் இந்த வாய்ப்பை இழக்காமல் விரைவில் சேரலாம் என்றும் கூறியுள்ளது.
மேலும் அவர்களின் திறமை மற்றும் அவர்கள் எந்த அளவிற்கு வேகமாக சுறுசுறுப்புடன் வேலை செய்கிறார்கள், ஆகியவற்றை கருத்தில் கொண்டு பதவிகள் நிரந்தரமாக கூட வாய்ப்பு இருக்கலாம் என்றும் அமேசான் இந்த அட்டகாசமான வாய்ப்பை அறிவித்துள்ளது.
இந்த வேலையை seasonalhiringindia@amazon.com என்ற மெயில் ஐடி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. அல்லது 1800-208-9900 என்ற என்னை தொடர்பு கொண்டு விவரங்களை கூறலாம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…