இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்த 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள்!

Published by
Rebekal

கொரோனா சிகிச்சைக்காக இந்தோனேசியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒரு புறமிருக்க ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனையில் அத்தியாவசிய உபகரணங்களுக்கு பற்றாக்குறை என ஒருபுறம் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த நெருக்கடி கால கட்டத்தில் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைத்து உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் இருந்து தற்பொழுது 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் தற்பொழுது இந்தியாவை வந்தடைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தோனேசியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதாகவும், இந்தோனேசியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஆயிரம் ஆண்டு பழமையான நாகரிக இணைப்புகளை மேலும் வளப்படுத்தும் வகையில் இந்த உதவி அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

48 seconds ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

2 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago