ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் – மத்திய பிரதேச மருத்துவமனை..!

Published by
Hema

ஆம்போடெரிசின்-பி ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கியது. இதைத் தொடர்ந்து பூஞ்சைத் தொற்றுகள் நாட்டில் தலைத்துாக்கத் தொடங்கியுள்ளது. அதில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என ரக ரசமாக பூஞ்சைத் தொற்றுகள் மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது.

மேலும் பூஞ்சைத் தொற்று அதிகரிக்க அதிகரிக்க இதற்கான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடும் அதிகமாகியுள்ளது. பூஞ்சைத் தொற்றால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியிருந்தாலும் உயிரழப்புகளானது மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.

இதையடுத்து மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள அரசு பண்டேல்கண்ட் மருத்துவக் கல்லூரி (பி.எம்.சி) இல் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 27 நோயாளிகளுக்கு ஆம்போடெரிசின்-பி ஊசி போடப்பட்ட பின்னர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சனிக்கிழமை மாலையே கருப்பு பூஞ்சை சிகிச்சையில் முக்கிய மருந்தான இந்த ஊசி பயன்பாடு  உடனடியாக நிறுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பி.எம்.சி மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் உமேஷ் படேல் தொலைபேசியில் பி.டி.ஐ. யிடம் கூறுகையில், மியூகோமைகோசிஸ் வார்டில் அனுமதிக்கப்பட்ட 42 நோயாளிகளில் குறைந்தது 27 நோயாளிகளுக்கு சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆம்போடெரிசின்-பி ஊசி வழங்கப்பட்டது.

அந்த மருந்து அரசாங்கத்தால் தங்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும், அவர்களுக்கு ஊசி போடப்பட்ட உடனேயே நோயாளிகள் லேசான காய்ச்சல், நடுக்கம் மற்றும் வாந்தி போன்ற பாதகமான எதிர்விளைவுகளைப் பற்றி புகார் செய்யத் தொடங்கினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த ஊசி பயன்பாட்டை உடனேயே நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் பி.எம்.சி கண்காணிப்பாளர் மற்றும் டீன் தலையிட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை உடனடியாக தொடங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.  அனைத்து நோயாளிகளின் நிலை தற்போது நிலையானதாக உள்ளதாகவும். பயப்படத் தேவையில்லை ”என்று டாக்டர் படேல் கூறியுள்ளார்.

Published by
Hema

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago