இன்று சோப்பூர் நகரில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சோபூர் நகரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். சோபூர் மாவட்டத்தின் ரெபன் பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் லஷ்கர்-இ-தைபா அமைப்பை சார்ந்த உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐ.ஜி.பி விஜய்குமார் தெரிவித்தார்.
அண்மையில் சோப்பூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎஃப் மற்றும் ஒரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…