வகுப்பறையில் விசில் அடித்த 40 மாணவர்களுக்கு பிரம்படி – 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Published by
Rebekal

ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தின் தோஹானா எனும் பகுதியில் உள்ள, அரசு பள்ளி ஒன்றில் நேற்று மாணவர்கள் வகுப்பறையில் வைத்து விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசில் அடித்த மாணவர்கள் அனைவரையும், அவர்களது பெற்றோர்களை வரவழைத்து வருமாறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சில மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும் வந்திருந்த நிலையில், பெற்றோர்களின் முன்னிலையில் வைத்து அந்த மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கியுள்ளனர்.

ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில் பல மாணவர்களின் முதுகுப்புறம் மற்றும் கால்களில் வீக்கங்கள் ஏற்பட்டு மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனையடுத்து இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சாதி அடிப்படையில் தான் மாணவர்களை தாக்கியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர்கள் தாக்கியது குறித்து பெற்றோரிடம் கூறினால், பெண் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி புகார் அளித்து விடுவோம் என மிரட்டியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 10 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் தாக்கி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

4 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

5 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

6 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

6 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

10 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

10 hours ago