மருத்துவமனை கட்டிடத்திலிருந்து குதித்து 45 வயது மருத்துவர் தற்கொலை..!

Published by
Rebekal

பெங்களூரில் 45 வயது மருத்துவர் ஒருவர் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றில்  பணியாற்றி வரக்கூடிய மருத்துவர் அம்பரிஷ் விஜயராகவன், சைக்காலஜி துறை உதவிப் பேராசிரியராகவும் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல் பணிக்கு வந்து, சக மருத்துவர்களிடம் சாதாரணமாகவே பேசி சிரித்து இருந்துள்ளார். ஆனால் புதன்கிழமை அன்று இரவு 11.45 மணி அளவில் அவர் மருத்துவமனை கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தனது கார் பழுதாகிவிட்டதாகவும், பழுது பார்க்க சென்றிருந்தது குறித்து அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததையும் சிலர் கேட்டதாக கூறப்படுகிறது. அதுவே அவரை கடைசியாக பார்த்தது எனவும் கூறியுள்ளனர். அதன் பின்னர் இது குறித்து அவரது மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது கணவர் தன்னிடம் எதை குறித்தும் ஆலோசிக்க மாட்டார் எனவும், ஆனால் சில மாதங்களாக அவர் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து சதாசிவ நகர் காவல் துறையினர் கூறுகையில், மருத்துவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர் தற்கொலை குறித்து எந்த ஒரு தகவலும் தற்பொழுது வரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மருத்துவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த மருத்துவரின் உடல், அதன் பின் அவரது குடும்பத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago