ரயில் பாதையில் உள்ள 48,000 குடியிருப்புகளை அகற்ற வேண்டும்.! 3 மாதம் கலவகாசம் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் 140 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையில் உள்ள 48,000 சேரி குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.

தலைநகர் டெல்லியில் 140 கி.மீ ரயில் பாதைகளில் உள்ள 48,000 சேரி குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனை 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் எந்த நீதிமன்றமும் தடையாக இருக்கக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாசு தொடர்பான எம்.சி மேத்தா வழக்கு தொடர்பானது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் 1985 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது வழிகாட்டுதல்களை அனுப்பி வருகிறது. ரயில் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எந்தவொரு தங்குமிடத்தையும் வழங்காது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ம் தேதி நிறைவேற்றிய உத்தரவில், ரயில் பாதைகளுடன் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் தொடர்பாக எந்தவொரு இடைக்கால உத்தரவும் வழங்கப்பட்டால், அது பயனுள்ளதாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது.

டெல்லியின் என்.சி.டி (National Capital Territory) பிராந்தியத்தில் 140 கி.மீ. நீளமுள்ள பாதையில் சேரி குடியிருப்புகள் இருப்பதாக இந்திய ரயில்வே வாக்கு மூலத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது. அத்துமீறல்களை அகற்றும் பணியில் அரசியல் தலையீடு இருப்பதாக இந்திய ரயில்வே எஸ்.சி.க்கு தெரிவித்திருந்தது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

5 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

6 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

7 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

7 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

8 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

9 hours ago