{File source : Getty Images}
குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராம்கோலா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள குடிசைப்பகுதியான அங்கு ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ பல வீடுகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரும் காயமடைந்தார்.
இந்நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.
ஷேர் முகமது என்பவரது மாற்றுத்திறனாளி மனைவி பாத்திமா மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளான ரோகி (6), அமினா (4), ஆயிஷா (2), மற்றும் இரண்டு மாத குழந்தை கதீஜா ஆகியோர் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…