தங்கத்துக்கு 6 கோடி, வெள்ளிக்கு 4 கோடி, வெண்கலத்துக்கு 2 கோடி.! பரித்தொகையை அறிவித்த உத்தரபிரதேச அரசு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • 2020-ம் ஆண்டுக்கான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
  • அந்த வகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனையருக்கு தலா ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

2020-ம் ஆண்டுக்கான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தனித்துவம் கொண்டதாக உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில், இந்தியா சார்பில் பங்குபெறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக, தங்கம் வெல்லும் உத்திரபிரதேச மாநில வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு தலா ரூ.4 கோடியும், வெண்கலம் வெல்வோருக்கு தலா ரூ.2 கோடியும், பரிசாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த அறிவிப்பானது உத்திரபிரதேச ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் எனவும் உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

6 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

7 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

8 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

8 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

9 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

10 hours ago